Saturday, December 19, 2015

மழை சிறுகதைகள்!!
2) தண்ணியில கண்டம்
வானம் இருண்டு கிடந்தது.... இரண்டு மூன்று நாட்களாக மழை விடாது பெய்து இயல்பு வாழ்க்கையை முடக்கி போட்டிருந்தது.....  இவ்வளவு பாதிப்பு இருந்தும்.... டாஸ்மாக் கடையில் கூட்டம் கொறயல.... மப்பும், மந்தாரமுமான சூழலால் கடை நிரம்பி வழிந்தது.... புறம்போக்கு பயல் ஒருத்தன்.... ரொம்ப நேரமா ஒக்காந்து தண்ணியடிச்சிக்கிட்டிருந்தான்.... காலைல நல்ல வேட்டை போல... சாயங்காலமே ராத்திரி போல இருட்டிகிட்டு வந்தது.... கரண்ட் வேற கட்டாக... குடிகார பயலுங்க சலம்ப.... பார்க்காரன் நாலஞ்சு மெழுகுவத்திய ஏத்திவெச்சான்... பொறம்பொக்கு பயல் இரண்டு எக்ஸ்ட்ரா பட்டில்களை வாங்கி இடுப்புல சொருகினு... ஸ்கூல் ஓரமா ஒதுங்குனான்... போதை தலைக்கேற... பயலுக்கு ஒடம்பு நம நமக்க ஆரம்பிச்சிட்டது... ஒரு சிகரெட் பத்தவைத்தபடியே நடந்து வாய்க்கா பக்கம் ஒதுங்குனான்... ஒன்னுக்கு போய்ட்டு... வாய்க்கா ஓரமுள்ள குடிசைங்க பக்கம் நோட்டம் விட்ட படியே நடந்தான்... அப்படி போகையில... கட்டிட வேலை பாக்குற ஒரு கூலிக்கார குடும்பம்... சாப்ட்டுட்டு அசதியா திண்ணையில படுத்து கெடந்தாங்க.... இந்த பயல் நைசா கூலிகாரனோட சின்ன பொண்ண வாய பொத்தி தூக்கிட்டான்... ஸ்கூல் படிக்கிற சின்ன பொண்ணும் பாக்காம தன்னோட ஒடம்பு பசிக்கு இரையாக்க முடிவு பண்ணான்... பொண்ணு திமிரவே... மதுவை எடுத்து பொண்ணு வாயில் ஊத்தினான்.... திரும்பவும் ஆள் அரவரம் இல்லாத பள்ளிக்கூடத்தோரம் ஒதுங்கினான்... அந்த பெண் போதையில் மயங்கி கிடக்க... மீதமிருந்த சரக்கை காலி செய்தான்... அது போதல.... அந்த பொண்ண ஒரு இருட்டா இருந்த இடத்துல படுக்க வச்சிட்டு டாஸ்மாக்கை நோக்கி நடந்தான்.... லேசா தூற ஆரம்பிக்க ஓட்டமாக ஓடி டாஸ்மாக்கை அடைந்தான்... ஒரே கூட்டம்... மழை பெரு மழையாக ஆரம்பித்தது.... வாங்கிய சரக்கில் ஒன்றை மழை விடும் வரை குடிப்போம் என நினைத்து.... பாரில் உள்ளே நுழைந்ததும்.... இவனுடைய குரூப் ஒன்னு ஒக்காந்து தண்ணிய போட்டுகினு இருந்தது... இவனை பார்த்ததும் ஜோதியில் ஐக்கியமாக வைச்சாங்க.... வேற வழி இல்லாம மழை வுடற வரைக்கும் சாமளிப்போம்னு ஒக்காந்தான்.... டைம் ஆக ஆக பெரு மழை பேய் மழையானது....விடாமல் அடிச்சி ஊத்தி மழை அடங்க இரண்டு மூணு மணி நேரம் ஆனது....  வெளியே மைக்கில் ஏதோ அறிவிச்சிட்டு போனாங்க... இந்த பயல் நைசா எஸ்கேப் ஆகி வெளியே வந்தான்.... தூத்தல் போட்டுகினுதான் இருந்திச்சி... ஒரு பிளாஸ்டிக் கவர தலையில கவுத்துகினு ஸ்கூல நோக்கி வேகமாக நடந்தான்... ரோடெல்லாம் தண்ணி.... இடுப்பில தொட்டு பாத்துகிட்டான் குவாட்டர் பாட்டில... ஸ்கூல நெருங்க கொஞ்ச நேரம் ஆச்சு.... கிட்ட போனதும் பாத்தா... ஸ்கூல் கேட் தெறந்து கெடந்தது.... மெதுவா உள்ள எட்டி பாத்தான்.... உள்ள மொத்த குடிச ஜனமும் அடங்கி கெடந்தது.... கார்பரேஷன் ஆபீஸர் ஒருத்தர், ஜனங்க கிட்ட சொல்லிகிட்டிருந்தத கேட்டான்... கன மழையால பெரிய ஏரிய தொறந்து விட்ருக்கிறதாகவும்... மக்கள பாதுகாப்பான எடத்துல தங்க வெக்க பெரிய ஆபீஸருங்க ஆர்டர் போட்ருக்கறாதகவும்......  சரி இன்னிக்கு வேட்டை மிஸ் ஆகிடுச்சின்னு குவார்டர கையில எடுத்துகினு மறவா ஒதுங்குனான்...  அவனுக்கு லேசா வயிறு கலக்குற மாறி இருக்கவும்... ஓடை பக்கமா ஒதுங்க நடந்தான்.... காலில் சுள்ளுன்னு ஏதோ குத்த, மரண வலி... தீப்பெட்டிய பத்த வெச்சு பாத்தா... கொஞ்ச நேரம் முன்னாடி இவன் அந்த சின்ன பொண்ணுக்கு உத்திவிட்டு கீழே தூக்கி அடிச்ச பாட்டில்.... ரத்தம் பொல பொலன்னு ஊத்த.... கண்ணாடி துண்ட வெளியே எடுத்தான்.... புது குவர்டர் பாட்டிலில் இருந்து கொஞ்சம் பிராந்திய காயத்தின் மேல ஊத்துனான்... வயிறு கல கல ங்க... கால் வலியோட ஓடையில ஓரமா ஒக்காந்தான்....  ஒரு அஞ்சி நிமிஷம் கூட ஆயிருக்காது... ஓடைத்தண்ணி கால் வரை வந்துடிச்சி... சரின்னு கு####ய கழுவினான்... தீடீல்னு தண்ணி போர்ஸா வர ஆரம்பிச்சது.... வேக வேகமா கழுவிட்டு எந்திரிக்கிரதுக்குள்ள தண்ணி நெஞ்சளவு வந்துடிச்சி... தண்ணில வேகமா நடக்க முடியல... போதை வேற... கால்ல குத்துன கண்ணாடி வேற.....  வழியில்லன்னு ஓட முயற்சி செஞ்சான்... பின்பக்கம் ஹோவென்ற சத்தம்... திரும்பி பாத்தா ஆள் ஒசரத்துக்கும் மேல தண்ணி இவனை நோக்கி....   

Thursday, December 17, 2015

பிராயசித்தம்

மழை சிறுகதைகள்!!
1) பிராயசித்தம்
நம்ம நண்பர், அதாவது கதையோட நாயகன் சென்னையில் வசிக்கும் ஒரு சிவில் காண்ட்ராக்டர்.... கடுமையான உழைப்பாளி.... ரியல் எஸ்டேட் மார்கெட் சூடு பிடிச்க ஆரம்பிச்ச சமயத்துல, சின்ன பட்ஜெட் ப்ராஜக்டுகளை பண்ணிகிட்டிருந்தாரு.... நாளாக நாளாக... அவர் காட்டில் அடை மழை.... பணம் ஏகமா பொரள, மனுஷன் ஆளே மாறிட்டாரு.... சின்ன ப்ராஜக்டுகள் போய்... சில காலமா பல கோடி மதிப்பிலான பெரிய அடுக்குமாடிகள் கட்டும் காண்ட்ராக்டுகளை மட்டும் செய்துகிட்டிருந்தார்.... தென்சென்னையில் ஐ.டி கம்பெனிகள் வளர வளர... சாரோட பேங்க் பேலன்சும் வளர்ந்துகிட்டே போனது.... அப்ரூவல் வாங்குறது முதல்... கட்டிமுடிக்கும் வரை.. நண்பர் தீயா வேல செய்வாரு... ரொம்ப நாள் பீல்டுல இருக்கிறதால... கவுன்சிலர் முதல், கார்பரேஷன் வரை.... மந்திரியானாலும் சரி... அதிகாரியானாலும் சரி... எல்லாரையும் சரி கட்டி விடுவார்....  ரொம்ப நாளா அவருக்கு ஒரு ஆசை... சொந்தமா தன் ரசனைக்கேற்ப எல்லா வசதிகளுடன் தனி வீடு கட்டி குடியேற வேணும்னு ஆச பட்டாரு.... காண்ட்ராக்டராக இருந்ததால இடம் சீக்கிரமா கிடைச்சது.... தண்ணி பிரச்சனை எதும் வராக்கூடாதுன்னு சென்னையின் முக்கிய ஏரிக்கு பக்கமாக காஸ்ட்லியான ஆளுங்க இருக்கிற எடமா பாத்து இடம் வாங்கி... பிரம்மாண்டமான அரண்மனை போல வீடு கட்டினார்.... வீட்டுல எல்லாரும் ஒரே ஹேப்பிதான் போங்கோ.... கார்கள், நகை, வேலையாட்கள் எதுக்கும் குறையில்லாம நல்லாதான் போனது வாழ்க்கை.... வேலை காரணமாக எல்லா மட்டத்துலயும் லிங்க் இருந்ததால.... பலருக்கு இவர் வேலை முடிச்சி குடுத்து கனிசமா அமெளன்ட் பார்க்க ஆரம்பிச்சாரு.... பொண்ணு டாக்டருக்கு படிக்க, பையன் அமெரிக்காவுல மேல் படிப்பு படிக்க.... இன்னும் பல செலவுகளுக்கு இந்த அமெளண்ட்கள் வசதியாக போனது.... நாள் ஆக ஆக.... வில்லங்கமான இட விஷயங்களிலும் உதவி செய்ய ஆரம்பித்தார்.... இதில் பண வரவு தாறு மாறாக எகிற... புல் டைம் வில்லங்க விஷயமாக பிசியாக இருந்தார்.... பீச்சோரம் பெரிய மனுஷங்களுக்காக கட்டுற “சீ வியு” ப்ராஜக்டுகளுக்காக.... பல உள்ளடி வேலைகள் செய்ய ஆரம்பிச்சாரு..... இதனால... பல அப்பாவி ஜனங்க வீடில்லாம அலைஞ்சாங்க.... ஆனா மேல் தட்டு மக்களுக்கு... அவர்களின் தனிப்பட்ட உல்லாசம் தேவையாக இருந்தது..... காசு இருக்கும் போதே அனுபவித்துக்கொள்ளவேண்டும் என்பது அவர்கள் பாலிஸி..... அதற்கு எந்த விலையானாலும் கொடுக்க தயாராக இருந்தார்கள்.... அவர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட தேவைகள் மட்டுமே முக்கியமானதாக இருந்தது.... இந்த நிலையில் நம் நண்பர் தன் பெண்ணிற்கு கல்யாண ஏற்பாடுகளை செய்வதில் மும்முறமாக இருந்தார்.... வீடு முழுவதும், துணி மணிகளும், நகைகளும் இறைந்து கிடந்தது..... சென்னையின் முக்கிய கல்யாண மண்டபத்தை அட்வான்ஸாக புக் செய்து வைத்திருந்தார்.... பெரிய புள்ளிகள்... அதிகாரிகள்... அரசியல் ஆல்-இன்-ஆல் –கள், சொந்த பந்தங்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை.... எல்லாரயும் அழைத்திருந்தார்... அவரின் உதவியாளர்கள் பம்பரமாய் சுழன்று சுழன்று வேலை பார்த்தனர்.... கல்யாணத்திற்கு சில நாட்கள் இருந்த நிலையில்... நண்பருக்கு நிலை கொள்ளவில்லை.... அன்று இரவு தூங்க போனவருக்கு தூக்கமே வரவில்லை.... கல்யாண காட்சிகள் கனவாக வந்து தொல்லை கொடுக்க.... அரை தூக்கதிலிருந்தார்.... நள்ளிரவு ஒரு மணி அளவில் பாத்ரூம் போக காலை கீழே வைத்தவர் ஆடி போய்விட்டார்.... வீடே வெள்ளக் காடாக... முதல் மாடி வரை தண்ணீர்.... மனைவி மக்களுடன் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தார்.... செல்போன் செத்து போய் கிடந்தது.... விடியற்காலையில் இரண்டு மூன்று பேர் படகுகளில் மைக் வைத்து... அறிவிப்பு செய்து கொண்டிருந்தனர்.... பெருமழை காரணமாக ஏரிகள் திறந்து விட்டதால் தீடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும்.... மக்கள் அனைவரும் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடம் பெயர சொல்லிக்கொண்டிருந்தனர்... நாளை திருமணம்... வெளியே பேய் மழை....  யாரையும் தொடர்புகொள்ள முடியாத நிலை.... வேறு வழியின்றி.. அனைவரும் படகின் உதவியுடன் அருகில் உள்ள அரசு முகாமை வந்தடைந்தார்.... அங்கிருந்து.... சில சமூக ஆர்வலர்கள் மூலம் வெளியேறி... பிரபல நட்சத்திர ஓட்டலில் தஞ்சமடைந்தார்.... மாப்பிள்ளை வீட்டாருக்கு தகவல் சொல்லி திருமணத்தை வேறு நாட்களுக்கு தள்ளி வைக்க முடிவு செய்தனர்.... நேரம் ஆக ஆக மழை விடாமல் வெளுத்து வாங்கியது.... நண்பருக்கோ வீட்டில் அனைத்து கல்யாண பொருட்களும் பத்திரமாக இருக்குமோ என்ற கவலை அரித்தெடுத்துக்கொண்டிருந்தது....... விடாது பெய்த பேய் மழை பாரபட்சம் பார்க்காமல் பெய்து தீர்த்தது..... இந்த மழையில் நம்ம வாட்ச்மேன் ஒருத்தரோட பொண்ணு கண்ணாலமும் நின்னு போச்சு.... இருந்த குடிசையும் இடம் தெரியாம தண்ணியோட போக.... எல்லாரும் கவர்மெண்ட் ஸ்கூல்ல போய் தஞ்சமடைஞ்சாங்க.... நம்ம வாட்ச்மேன் சும்மா இல்லாம... குடும்பத்த ஸ்கூல்ல விட்டுட்டு மத்தவங்கள காப்பாத்த போய்ட்டாரு.... வாட்ச்மேன் பொண்டாட்டி.... பொலம்பி தீத்துட்டா.... பொண்ணு கண்ணாலத்துக்கு வெச்சிருந்த ஒரு பொட்டு நகையும், தண்ணில போய்டுச்சே... இந்த மனுஷன் கவலபடாம வெளியெ போய்ட்டாரேன்னு ஒரே பொலம்பல்.... 

இது இப்படி இருக்க பீச்சோரம் இருந்த பெரிய மனுஷங்க எல்லாம்... அரண்டு போய் கிடந்தங்க.... இப்படி ஒரு மழைய அவங்க வழ்நாள்ல பாத்திருப்பாங்களா!! எந்த எழை பாழைகள தொரத்திட்டு வீடு கட்டுனாங்களோ அந்த குப்பத்து ஜனங்க தான் உதவிக்கு ஓடி வந்தாங்க.... எல்லரையும் பாதுகாப்பா வெளியேத்திட்டு... தண்ணில நின்னாங்க....

லேசா மழை ஒய்ஞ்சது.... ஆனா வெள்ளம் வடியல.... எங்கெங்கெருந்தோ முகம் தெரியாத மனுஷங்க ஒடி வந்து ஒதவி செஞ்சாங்க... சாப்பாடு குடுத்தாங்க... வாட்ச்மேன் பெரிய பொண்ணும்... சின்ன பொண்ணும் ஸ்கூல் ஓரமா வந்த வாய்கா தண்ணில கிழிஞ்ச துண்டுல மீன் புடிச்சி வெளையடினு இருந்துச்சிங்க.... அப்போ ஒரு நீல கலர் வெல்வெட் டப்பா மாட்டுச்சி.... ரெண்டு பேரும் ஒடி போய் அவங்க அம்மாகிட்ட காமிச்சாங்க.... தெறந்து பாத்தா புத்தம் புது தாலி...... மொத்த குடும்பமும் ஒறஞ்சு போய் நின்னுட்டாங்க.... அடிச்ச காத்துல பறந்து வந்து கை மேல விழுந்திச்சி ஒரு மயில் கொண்டை பூ.... அழகா சிரிச்சிகிட்டே....


அது வேற யாரு பொருளும் இல்லிங்க.,.. நம்ம கண்ட்ராக்டர் நண்பர் பொண்ணுக்காக வாங்கி வெச்ச தாலிய அவரு மனைவி தவறுதலா டிரஸிங் டேபிள் மேலேயே வைக்க.... மழை வெள்ளத்துல அடிச்சிட்டு வந்துடிச்சி!!!