Saturday, December 19, 2015

மழை சிறுகதைகள்!!
2) தண்ணியில கண்டம்
வானம் இருண்டு கிடந்தது.... இரண்டு மூன்று நாட்களாக மழை விடாது பெய்து இயல்பு வாழ்க்கையை முடக்கி போட்டிருந்தது.....  இவ்வளவு பாதிப்பு இருந்தும்.... டாஸ்மாக் கடையில் கூட்டம் கொறயல.... மப்பும், மந்தாரமுமான சூழலால் கடை நிரம்பி வழிந்தது.... புறம்போக்கு பயல் ஒருத்தன்.... ரொம்ப நேரமா ஒக்காந்து தண்ணியடிச்சிக்கிட்டிருந்தான்.... காலைல நல்ல வேட்டை போல... சாயங்காலமே ராத்திரி போல இருட்டிகிட்டு வந்தது.... கரண்ட் வேற கட்டாக... குடிகார பயலுங்க சலம்ப.... பார்க்காரன் நாலஞ்சு மெழுகுவத்திய ஏத்திவெச்சான்... பொறம்பொக்கு பயல் இரண்டு எக்ஸ்ட்ரா பட்டில்களை வாங்கி இடுப்புல சொருகினு... ஸ்கூல் ஓரமா ஒதுங்குனான்... போதை தலைக்கேற... பயலுக்கு ஒடம்பு நம நமக்க ஆரம்பிச்சிட்டது... ஒரு சிகரெட் பத்தவைத்தபடியே நடந்து வாய்க்கா பக்கம் ஒதுங்குனான்... ஒன்னுக்கு போய்ட்டு... வாய்க்கா ஓரமுள்ள குடிசைங்க பக்கம் நோட்டம் விட்ட படியே நடந்தான்... அப்படி போகையில... கட்டிட வேலை பாக்குற ஒரு கூலிக்கார குடும்பம்... சாப்ட்டுட்டு அசதியா திண்ணையில படுத்து கெடந்தாங்க.... இந்த பயல் நைசா கூலிகாரனோட சின்ன பொண்ண வாய பொத்தி தூக்கிட்டான்... ஸ்கூல் படிக்கிற சின்ன பொண்ணும் பாக்காம தன்னோட ஒடம்பு பசிக்கு இரையாக்க முடிவு பண்ணான்... பொண்ணு திமிரவே... மதுவை எடுத்து பொண்ணு வாயில் ஊத்தினான்.... திரும்பவும் ஆள் அரவரம் இல்லாத பள்ளிக்கூடத்தோரம் ஒதுங்கினான்... அந்த பெண் போதையில் மயங்கி கிடக்க... மீதமிருந்த சரக்கை காலி செய்தான்... அது போதல.... அந்த பொண்ண ஒரு இருட்டா இருந்த இடத்துல படுக்க வச்சிட்டு டாஸ்மாக்கை நோக்கி நடந்தான்.... லேசா தூற ஆரம்பிக்க ஓட்டமாக ஓடி டாஸ்மாக்கை அடைந்தான்... ஒரே கூட்டம்... மழை பெரு மழையாக ஆரம்பித்தது.... வாங்கிய சரக்கில் ஒன்றை மழை விடும் வரை குடிப்போம் என நினைத்து.... பாரில் உள்ளே நுழைந்ததும்.... இவனுடைய குரூப் ஒன்னு ஒக்காந்து தண்ணிய போட்டுகினு இருந்தது... இவனை பார்த்ததும் ஜோதியில் ஐக்கியமாக வைச்சாங்க.... வேற வழி இல்லாம மழை வுடற வரைக்கும் சாமளிப்போம்னு ஒக்காந்தான்.... டைம் ஆக ஆக பெரு மழை பேய் மழையானது....விடாமல் அடிச்சி ஊத்தி மழை அடங்க இரண்டு மூணு மணி நேரம் ஆனது....  வெளியே மைக்கில் ஏதோ அறிவிச்சிட்டு போனாங்க... இந்த பயல் நைசா எஸ்கேப் ஆகி வெளியே வந்தான்.... தூத்தல் போட்டுகினுதான் இருந்திச்சி... ஒரு பிளாஸ்டிக் கவர தலையில கவுத்துகினு ஸ்கூல நோக்கி வேகமாக நடந்தான்... ரோடெல்லாம் தண்ணி.... இடுப்பில தொட்டு பாத்துகிட்டான் குவாட்டர் பாட்டில... ஸ்கூல நெருங்க கொஞ்ச நேரம் ஆச்சு.... கிட்ட போனதும் பாத்தா... ஸ்கூல் கேட் தெறந்து கெடந்தது.... மெதுவா உள்ள எட்டி பாத்தான்.... உள்ள மொத்த குடிச ஜனமும் அடங்கி கெடந்தது.... கார்பரேஷன் ஆபீஸர் ஒருத்தர், ஜனங்க கிட்ட சொல்லிகிட்டிருந்தத கேட்டான்... கன மழையால பெரிய ஏரிய தொறந்து விட்ருக்கிறதாகவும்... மக்கள பாதுகாப்பான எடத்துல தங்க வெக்க பெரிய ஆபீஸருங்க ஆர்டர் போட்ருக்கறாதகவும்......  சரி இன்னிக்கு வேட்டை மிஸ் ஆகிடுச்சின்னு குவார்டர கையில எடுத்துகினு மறவா ஒதுங்குனான்...  அவனுக்கு லேசா வயிறு கலக்குற மாறி இருக்கவும்... ஓடை பக்கமா ஒதுங்க நடந்தான்.... காலில் சுள்ளுன்னு ஏதோ குத்த, மரண வலி... தீப்பெட்டிய பத்த வெச்சு பாத்தா... கொஞ்ச நேரம் முன்னாடி இவன் அந்த சின்ன பொண்ணுக்கு உத்திவிட்டு கீழே தூக்கி அடிச்ச பாட்டில்.... ரத்தம் பொல பொலன்னு ஊத்த.... கண்ணாடி துண்ட வெளியே எடுத்தான்.... புது குவர்டர் பாட்டிலில் இருந்து கொஞ்சம் பிராந்திய காயத்தின் மேல ஊத்துனான்... வயிறு கல கல ங்க... கால் வலியோட ஓடையில ஓரமா ஒக்காந்தான்....  ஒரு அஞ்சி நிமிஷம் கூட ஆயிருக்காது... ஓடைத்தண்ணி கால் வரை வந்துடிச்சி... சரின்னு கு####ய கழுவினான்... தீடீல்னு தண்ணி போர்ஸா வர ஆரம்பிச்சது.... வேக வேகமா கழுவிட்டு எந்திரிக்கிரதுக்குள்ள தண்ணி நெஞ்சளவு வந்துடிச்சி... தண்ணில வேகமா நடக்க முடியல... போதை வேற... கால்ல குத்துன கண்ணாடி வேற.....  வழியில்லன்னு ஓட முயற்சி செஞ்சான்... பின்பக்கம் ஹோவென்ற சத்தம்... திரும்பி பாத்தா ஆள் ஒசரத்துக்கும் மேல தண்ணி இவனை நோக்கி....   

Thursday, December 17, 2015

பிராயசித்தம்

மழை சிறுகதைகள்!!
1) பிராயசித்தம்
நம்ம நண்பர், அதாவது கதையோட நாயகன் சென்னையில் வசிக்கும் ஒரு சிவில் காண்ட்ராக்டர்.... கடுமையான உழைப்பாளி.... ரியல் எஸ்டேட் மார்கெட் சூடு பிடிச்க ஆரம்பிச்ச சமயத்துல, சின்ன பட்ஜெட் ப்ராஜக்டுகளை பண்ணிகிட்டிருந்தாரு.... நாளாக நாளாக... அவர் காட்டில் அடை மழை.... பணம் ஏகமா பொரள, மனுஷன் ஆளே மாறிட்டாரு.... சின்ன ப்ராஜக்டுகள் போய்... சில காலமா பல கோடி மதிப்பிலான பெரிய அடுக்குமாடிகள் கட்டும் காண்ட்ராக்டுகளை மட்டும் செய்துகிட்டிருந்தார்.... தென்சென்னையில் ஐ.டி கம்பெனிகள் வளர வளர... சாரோட பேங்க் பேலன்சும் வளர்ந்துகிட்டே போனது.... அப்ரூவல் வாங்குறது முதல்... கட்டிமுடிக்கும் வரை.. நண்பர் தீயா வேல செய்வாரு... ரொம்ப நாள் பீல்டுல இருக்கிறதால... கவுன்சிலர் முதல், கார்பரேஷன் வரை.... மந்திரியானாலும் சரி... அதிகாரியானாலும் சரி... எல்லாரையும் சரி கட்டி விடுவார்....  ரொம்ப நாளா அவருக்கு ஒரு ஆசை... சொந்தமா தன் ரசனைக்கேற்ப எல்லா வசதிகளுடன் தனி வீடு கட்டி குடியேற வேணும்னு ஆச பட்டாரு.... காண்ட்ராக்டராக இருந்ததால இடம் சீக்கிரமா கிடைச்சது.... தண்ணி பிரச்சனை எதும் வராக்கூடாதுன்னு சென்னையின் முக்கிய ஏரிக்கு பக்கமாக காஸ்ட்லியான ஆளுங்க இருக்கிற எடமா பாத்து இடம் வாங்கி... பிரம்மாண்டமான அரண்மனை போல வீடு கட்டினார்.... வீட்டுல எல்லாரும் ஒரே ஹேப்பிதான் போங்கோ.... கார்கள், நகை, வேலையாட்கள் எதுக்கும் குறையில்லாம நல்லாதான் போனது வாழ்க்கை.... வேலை காரணமாக எல்லா மட்டத்துலயும் லிங்க் இருந்ததால.... பலருக்கு இவர் வேலை முடிச்சி குடுத்து கனிசமா அமெளன்ட் பார்க்க ஆரம்பிச்சாரு.... பொண்ணு டாக்டருக்கு படிக்க, பையன் அமெரிக்காவுல மேல் படிப்பு படிக்க.... இன்னும் பல செலவுகளுக்கு இந்த அமெளண்ட்கள் வசதியாக போனது.... நாள் ஆக ஆக.... வில்லங்கமான இட விஷயங்களிலும் உதவி செய்ய ஆரம்பித்தார்.... இதில் பண வரவு தாறு மாறாக எகிற... புல் டைம் வில்லங்க விஷயமாக பிசியாக இருந்தார்.... பீச்சோரம் பெரிய மனுஷங்களுக்காக கட்டுற “சீ வியு” ப்ராஜக்டுகளுக்காக.... பல உள்ளடி வேலைகள் செய்ய ஆரம்பிச்சாரு..... இதனால... பல அப்பாவி ஜனங்க வீடில்லாம அலைஞ்சாங்க.... ஆனா மேல் தட்டு மக்களுக்கு... அவர்களின் தனிப்பட்ட உல்லாசம் தேவையாக இருந்தது..... காசு இருக்கும் போதே அனுபவித்துக்கொள்ளவேண்டும் என்பது அவர்கள் பாலிஸி..... அதற்கு எந்த விலையானாலும் கொடுக்க தயாராக இருந்தார்கள்.... அவர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட தேவைகள் மட்டுமே முக்கியமானதாக இருந்தது.... இந்த நிலையில் நம் நண்பர் தன் பெண்ணிற்கு கல்யாண ஏற்பாடுகளை செய்வதில் மும்முறமாக இருந்தார்.... வீடு முழுவதும், துணி மணிகளும், நகைகளும் இறைந்து கிடந்தது..... சென்னையின் முக்கிய கல்யாண மண்டபத்தை அட்வான்ஸாக புக் செய்து வைத்திருந்தார்.... பெரிய புள்ளிகள்... அதிகாரிகள்... அரசியல் ஆல்-இன்-ஆல் –கள், சொந்த பந்தங்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை.... எல்லாரயும் அழைத்திருந்தார்... அவரின் உதவியாளர்கள் பம்பரமாய் சுழன்று சுழன்று வேலை பார்த்தனர்.... கல்யாணத்திற்கு சில நாட்கள் இருந்த நிலையில்... நண்பருக்கு நிலை கொள்ளவில்லை.... அன்று இரவு தூங்க போனவருக்கு தூக்கமே வரவில்லை.... கல்யாண காட்சிகள் கனவாக வந்து தொல்லை கொடுக்க.... அரை தூக்கதிலிருந்தார்.... நள்ளிரவு ஒரு மணி அளவில் பாத்ரூம் போக காலை கீழே வைத்தவர் ஆடி போய்விட்டார்.... வீடே வெள்ளக் காடாக... முதல் மாடி வரை தண்ணீர்.... மனைவி மக்களுடன் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தார்.... செல்போன் செத்து போய் கிடந்தது.... விடியற்காலையில் இரண்டு மூன்று பேர் படகுகளில் மைக் வைத்து... அறிவிப்பு செய்து கொண்டிருந்தனர்.... பெருமழை காரணமாக ஏரிகள் திறந்து விட்டதால் தீடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும்.... மக்கள் அனைவரும் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடம் பெயர சொல்லிக்கொண்டிருந்தனர்... நாளை திருமணம்... வெளியே பேய் மழை....  யாரையும் தொடர்புகொள்ள முடியாத நிலை.... வேறு வழியின்றி.. அனைவரும் படகின் உதவியுடன் அருகில் உள்ள அரசு முகாமை வந்தடைந்தார்.... அங்கிருந்து.... சில சமூக ஆர்வலர்கள் மூலம் வெளியேறி... பிரபல நட்சத்திர ஓட்டலில் தஞ்சமடைந்தார்.... மாப்பிள்ளை வீட்டாருக்கு தகவல் சொல்லி திருமணத்தை வேறு நாட்களுக்கு தள்ளி வைக்க முடிவு செய்தனர்.... நேரம் ஆக ஆக மழை விடாமல் வெளுத்து வாங்கியது.... நண்பருக்கோ வீட்டில் அனைத்து கல்யாண பொருட்களும் பத்திரமாக இருக்குமோ என்ற கவலை அரித்தெடுத்துக்கொண்டிருந்தது....... விடாது பெய்த பேய் மழை பாரபட்சம் பார்க்காமல் பெய்து தீர்த்தது..... இந்த மழையில் நம்ம வாட்ச்மேன் ஒருத்தரோட பொண்ணு கண்ணாலமும் நின்னு போச்சு.... இருந்த குடிசையும் இடம் தெரியாம தண்ணியோட போக.... எல்லாரும் கவர்மெண்ட் ஸ்கூல்ல போய் தஞ்சமடைஞ்சாங்க.... நம்ம வாட்ச்மேன் சும்மா இல்லாம... குடும்பத்த ஸ்கூல்ல விட்டுட்டு மத்தவங்கள காப்பாத்த போய்ட்டாரு.... வாட்ச்மேன் பொண்டாட்டி.... பொலம்பி தீத்துட்டா.... பொண்ணு கண்ணாலத்துக்கு வெச்சிருந்த ஒரு பொட்டு நகையும், தண்ணில போய்டுச்சே... இந்த மனுஷன் கவலபடாம வெளியெ போய்ட்டாரேன்னு ஒரே பொலம்பல்.... 

இது இப்படி இருக்க பீச்சோரம் இருந்த பெரிய மனுஷங்க எல்லாம்... அரண்டு போய் கிடந்தங்க.... இப்படி ஒரு மழைய அவங்க வழ்நாள்ல பாத்திருப்பாங்களா!! எந்த எழை பாழைகள தொரத்திட்டு வீடு கட்டுனாங்களோ அந்த குப்பத்து ஜனங்க தான் உதவிக்கு ஓடி வந்தாங்க.... எல்லரையும் பாதுகாப்பா வெளியேத்திட்டு... தண்ணில நின்னாங்க....

லேசா மழை ஒய்ஞ்சது.... ஆனா வெள்ளம் வடியல.... எங்கெங்கெருந்தோ முகம் தெரியாத மனுஷங்க ஒடி வந்து ஒதவி செஞ்சாங்க... சாப்பாடு குடுத்தாங்க... வாட்ச்மேன் பெரிய பொண்ணும்... சின்ன பொண்ணும் ஸ்கூல் ஓரமா வந்த வாய்கா தண்ணில கிழிஞ்ச துண்டுல மீன் புடிச்சி வெளையடினு இருந்துச்சிங்க.... அப்போ ஒரு நீல கலர் வெல்வெட் டப்பா மாட்டுச்சி.... ரெண்டு பேரும் ஒடி போய் அவங்க அம்மாகிட்ட காமிச்சாங்க.... தெறந்து பாத்தா புத்தம் புது தாலி...... மொத்த குடும்பமும் ஒறஞ்சு போய் நின்னுட்டாங்க.... அடிச்ச காத்துல பறந்து வந்து கை மேல விழுந்திச்சி ஒரு மயில் கொண்டை பூ.... அழகா சிரிச்சிகிட்டே....


அது வேற யாரு பொருளும் இல்லிங்க.,.. நம்ம கண்ட்ராக்டர் நண்பர் பொண்ணுக்காக வாங்கி வெச்ச தாலிய அவரு மனைவி தவறுதலா டிரஸிங் டேபிள் மேலேயே வைக்க.... மழை வெள்ளத்துல அடிச்சிட்டு வந்துடிச்சி!!!

Thursday, December 30, 2010

மனசு

சின்ன பயலா இருக்கும் போது.... லீவ் விட்டா அத்தை வீட்டுக்கு போறது வழக்கம்.... எங்க அத்தை வீடு இருப்பது வட ஆற்காடு மாவட்டம் திருப்பத்தூர்....  நாங்க இருப்பது தர்மபுரியில்..... அப்பவெல்லாம் பஸ் பயணம்ங்கிறது ரொம்ப ஜாலியான விஷயம்... ஜன்னலோரத்தில் ஒக்காந்துகிட்டு வேடிக்கை பாத்துகிட்டே வருவோம்.... நான் மிஸ் பண்ணாம பாக்குற விஷயங்கள் 3,  போற வழியில் தென்பெண்ணை ஆறு அப்புறம் அத சுத்தி இருக்கிற தென்னந் தோப்பு, மாந்தோப்பு மனசுக்கு இதமான காத்து, அப்புறம் பச்சை பசேல் என்று விரிகிற காட்சி மனசுக்கு ஒரு இதமா இருக்கும், அத தாண்டினா போச்சம்பள்ளி, சின்ன ஊர், பஸ் அஞ்சு பத்து நிமிஷம் நிக்கும், எல்லாரும் மறக்காம வாங்குற ஒரு விஷயம், லிபட்டு (நிபட்!!)  (சென்னையில் இதை தட்டை, ஓட்டடை, தட்டுவடை, தட்டடை அப்படின்னு பல மாதிரி சொல்லுவாங்க) ... இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா, வெங்காயம், அரிசி மாவு, கடலை மாவு சிறிதளவு வேற என்ன என்னவோ போட்டு கடலை எண்ணையில் பொரிச்சு எடுப்பாங்க.... அந்த சுவை மறக்க முடியாத ஒன்னு...

போச்சம்பள்ளி தாண்டியவுடன் வரும் இன்னொரு சிற்றூர் மத்தூர்..... மத்தூரில் பஸ் நின்னதும் உடனே கூடிவிடும் சின்ன வியாபாரிகள் கூட்டம்... பன வெல்லம், பனங் கிழங்கு, பதனீ அப்படீன்னு ஒரே பனை மரத்து ஐட்டமா இருக்கும்...  பஸ் கிளம்பினாலும் அந்த பனை பொருளுகளோட வாசனை சுத்திகிட்டே இருக்கும்.... ஹ்ஹ்ம்ம்.....

மழை நாட்களில் சிறிய தூரலில் பஸ்ஸில் செல்லும் அனுபவம் மனசை விட்டு இன்னும் அகலாமல் இருக்கு.... தென்பெண்ணை ஆத்து பாலத்த தாண்டி வண்டி போகும்போது, மாமர கிளைகள் கைகெட்டும் தூரத்தில் தொங்கும், சில சமயங்களில் காய்த்து தொங்குகிற மாங்காய்கள் ரோட்டில் விழுந்து கிடக்கும், பயணிகள் கைகளால் பறிச்சும் மாங்கா பறிப்பாங்க.... அந்த அளவு செழுமை..... ம்ம்ம்ம்....

சமீபத்தில் ஊருக்கு போயிட்டு, திருப்பத்தூர் வரை காரில் போனோம்..... நிறைய மாற்றங்கள்...  (நான் சென்னையில் செட்டில் ஆகி விட்டதால்... ஊருக்கு போறது ரொம்ப கொறஞ்சிடுச்சி).... தென்பெண்ணை ஆத்து பாலத்துகிட்ட காரை கொஞ்ச நேரம் நிப்பாட்டி... ஏக்கபெருமூச்சு விட்டேன்.... பழைய ஞாபகம் சுத்தி சுத்தி வந்துச்சி.... அப்படியே கொஞ்ச தூரம் நடந்தேன்..... ஒரு சின்ன மாந்தோப்பு கிட்ட காரை நிப்பாட்டி.... சின்னதா ஒரு மாங்கா பறிக்க..... ஒரு குதி குதிச்சேன்.....  அவ்வளவுதான்.... எங்கிருந்தோ ஒரு கல் டும்ன்னு கார் மேல விழுந்தது..... அதுக்கப்புறம்..... யாரோ அசிங்கமா திட்டிகிட்டே ஓடி வர்ற மாதிரி சத்தம் கேட்டுச்சி...... !!!

Monday, December 27, 2010

நதி மூலம் - ரிஷி மூலம்

எங்க ஊரு வாத்தியாரு கலைராஜன் ஊரில் ரொம்ப பிரபலம்...  வேலைல இருந்து ரிடையர் ஆவறதுக்கு முன்னாடியே ஏழை பாழைங்களுக்கு உதவி பண்ணுவார்... அவர் மனைவியும் தன்னாலான உதவிகளை செஞ்சிகிட்டு வந்தாங்க... ஆனா எந்த விளம்பரமும் தேடிக்காத நல்ல மனுஷங்க.... இவங்களோட நடவடிக்கைய ரொம்ப காலமா கவனிச்சிகிட்டிருந்த ஒரு ஊர் பெரிய மனிதர்... இவங்களுக்கு அரசாங்கத்தின் மூலம் உதவி கிடைகிறாப்ல ஏற்பாடு செஞ்சு கொடுத்தார்... கவர்மெண்டோட நெறைய சமூக நல திட்டங்கள வாத்தியாரும் அவர் வீட்டம்மாவும் செய்துகிட்டிருந்தாங்க...  இந்த சமயத்துல வாத்தியார் சின்னதா ஒரு ஸ்கூல் ஆரம்பிச்சாரு...  அவருடைய சேவிங்க்ஸ் மொத்தத்தையும் போட்டு நல்ல படியா ஆரம்பிச்சாரு...  கொஞ்ச வருஷத்துல ரொம்ப பிரபலமான ஸ்கூலாக பேர் வாங்கிடுச்சு.... வாத்தியாரோட நல்ல மனசுக்கு ஏத்தாப்ல... அவங்க வீட்டம்மாவும் அவருக்கு ஒத்தாசையா இருந்தாங்க...  ஏழை குழந்தைங்களுக்கு கொறஞ்ச பீஸ், முடியாதவங்களுக்கு கவர்மென்ட் மூலமா புக், யுனிபார்ம், கல்வி உதவி தொகை அப்படின்னு அவங்களால முடிஞ்ச வகைல செஞ்சிகிட்டு இருந்தாங்க.  வாத்தியாரின் பிள்ளைங்களும் அந்த பள்ளிகூடத்துல தான் படிச்சு பெரிய வேலைல சேந்தாங்க.  கவர்மென்ட் உதவி அப்புறம் ஊரில் உள்ள பெரிய மனுஷங்க குடுக்கிற டொனேஷன் இதையெல்லாம் வெச்சு ஸ்கூல நல்லா டெவெலப் பண்ணிட்டாரு நம்ம வாத்தி...  ஆனா........
 
இத பாத்த நம்ப ஆளுங்க,  சின்ன சின்ன அல்லு சில்லுங்கல்லாம் ஸ்கூல் ஆரம்பிச்சாங்க......  கண்ட மேனிக்கு பீஸ், டொனேஷன் வாங்க ஆரம்பிச்சாங்க... அதில பாருங்க நம்ப க்ளோஸ் பிரண்டு ஒருத்தர் வகை தொகை இல்லாம, கை நீட்ட ஆரம்பிச்சாரு, அரசியல்வாதி, பைனான்ஸ் கம்பெனிகாரன், கந்து வட்டிகாரன் கிட்டயெல்லாம் டொனேஷன் வாங்கி, பாக்றதுக்கு டவுன்ல இருக்ற ஸ்கூலாட்டம் டேகேரஷன் பண்ணாரு.  எக்கச்சக்க விளம்பரம், பாக்குற எடத்துல எல்லாம் ஸ்கூல பத்தி பெருமையா விளம்பர பலகை எல்லாம் வெச்சாரு.   செம கலக்சன்,  மனுஷன்  சும்மா பள பளன்னு ஆய்ட்டாரு.  சார் இப்பவல்லாம் ரொம்ப பிஸி, ஸ்கூல் பங்க்ஷன் எல்லாத்துக்கும், பெரிய பெரிய தலைங்கள எல்லாம் கூப்டு ரொம்ப கிராண்டா நடத்துனாரு.  ஆண்டு விழாவுக்கு பிரபல நடிகர் நடிகைகளோட நடனம், பாட்டுன்னு ஒன்னும் சொல்லிக்கவே முடியலே.  நண்பருக்கு இப்ப 2  அல்லகைங்கதான் மெயின்.  அவங்கள தாண்டி அவர பாக்கணும்ன்னா ரொம்ப கஷ்டம்.   கூட இருக்ற அல்ல கைங்க தொல்ல தாங்காம, அண்ணன் உள்ளாட்சி தேர்தல்ல தலைவர் போஸ்ட்க்கு நின்னாரு,  எலக்சன் டைம்ல பணத்த தண்ணியா செலவு பண்ணாரு நம்ப பிரண்டு.  தலைவர் பதவிக்கு ரொம்ப காம்பெடிஷன் இருந்ததால நம்ம பார்டி, அவர் ப்ராபர்டி, ஸ்கூல் நெலம் எல்லாத்தையும் அடமானமா வெச்சாரு.  ஆனா பாருங்க நண்பரோட துரதிர்ஷ்டம், எலக்க்ஷன்ல பார்ட்டி படு தோல்வி, கடன் காரங்க தொல்ல அதிகமாய்டுச்சு, வேற வழி இல்லாம நம்ம ஆளு ஸ்கூல விக்க வேண்டியதா போச்சு.....  நண்பர் கூட இருந்த அல்லகைங்க தான் இப்ப இருக்கிற ஓனருக்கும் ரைட் லெப்ட் கைங்க....

நண்பரோட பசங்க இப்ப வாத்தியாரோட ஸ்கூல்ல தான் படிக்குதுங்க  !!!
        

Friday, November 26, 2010

தேன் மிட்டாய்

சின்ன வயசுல அம்மா கொடுக்கும் 50 பைசா ஒரு ரூபாய்க்கு நான் ஆசையாக வாங்குவது எனக்கு புடிச்ச தேன் மிட்டாய், கமர்கட், கடலை உருண்டை, பல்லி மிட்டாய் (சீரக மிட்டாய்)...

விடுமுறை நாட்கள்ல கில்லி, பம்பரம்ன்னு நாங்க மும்முரமா இருப்போம்.... சாப்பிடாம கொள்ளாம ஒரே விளையாட்டுதான்.....  மதியம் சாப்பாடெல்லாம் கெடயாது... மிட்டாய், கொழா தண்ணி...  எலந்த பழம், மங்கா, நாகப்பழம், தர்பீஸ்....   வீட்ல என்னா திட்டு வாங்கினாலும் இது வாரம் தவறாம நடக்கும்...  டௌசர் பாக்கெட்டில் எப்பவும் மிட்டாய் இருக்கும்...   செட்டியார் கடையில் வாங்கும்போது அவர் பேப்பரில் அழகாக மடிச்சு கொடுக்க.... பத்திரமாக இருக்கும்.

காலம் உருண்டோட... படிக்க வெளியூர் போக வேண்டியிருந்தது.... ரொம்ப கஷ்டமாக இருந்தாலும்.... வேற வழி இல்லை.  படிச்சி முடிச்சாச்சி..... திருவல்லிக்கேணி மேன்ஷன் வாழ்க்கை.... வேல தேட ஆரம்பிச்சாச்சி... அப்பா நண்பர் சிபாரிசில் பாரிஸில் பிரைவேட் கம்பெனியில் வேலை பார்க்க ஆரம்பித்து வருடங்கள் போனது...  கல்யாணமும் முடிஞ்சு குடும்பஸ்தன் ஆயாச்சு...  எப்பவாவது ஊருக்கு போக நேர்ந்தாலும், அவசர அவசரமாக வர வேண்டிய சூழ்நிலை.... ம்ம்ம்ம்..... எல்லாம் கனவு மாதிரி இருக்கு....

டவுனில் கடன உடன வாங்கி ஒரு சின்ன அபார்ட்மென்ட் வாங்கியாச்சு....   ரெண்டு கொழந்தையுமாச்சு.... கடைக்கு போறது வர்ரது எல்லாம் நாம தான் வேற வழி...... வந்த புதிதில் டவுன் வாழ்கை ரொம்ப ஜாலியாதான் இருந்தது.... மூணு நாலு வருஷம் போனதும்தான் புத்திக்கு உரைச்சது நம்ப இயந்திரதனமான வாழ்க்கைக்கு பழக்கபட்டுட்டோம்ன்னு.... இருந்தாலும் கிடைக்கிற நேரத்தில் பழசயும் புதுசையும் கம்பேர் செய்து பார்த்துகிறது என் வழக்கம்....

நான் வழக்கமா என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற அண்ணாச்சி கடைலதான் எல்லா மளிகை சாமான் மத்த லொட்டு லொசுக்கு எல்லாம் வாங்குறது....  ரெகுலரா சாமான் வாங்குறதால அண்ணாச்சி கடைல நின்னு சில நேரம் பேசிகிட்டு அப்படியே நோட்டம் விடறதுண்டு...  அண்ணாச்சி கடைக்கு பக்கத்தில் தெரு முனையில் ஒரு பங்க் கடை மாதிரி ஒரு சின்ன கடை இருக்கும்... சில சமயம் எனக்கு ஏதாவது சின்ன சின்ன ஐட்டம் வேணுங்கிற போது போவேன்... அரனாகயிறு, ஊசி, பின், கிளிப், இன்க் பில்லர், (இன்னும் சொல்லிகிட்டே போகலாம்) இது மாதிரி வீட்டம்மாவுக்கு தேவையான முக்கிய சாமான்கள் தேவைன்னும்போது அந்த கடைக்கு போகறதுண்டு....  சில சமயம் பொருள் வாங்குற சமயம் அப்படியே நோட்டம் விடுரதுண்டு....  அங்க நான் சின்ன வயசுல ஆசையா சாப்பிடுற மிட்டாய் ஐட்டமெல்லாம் இருக்கும்.... அந்த தெருவுல போகிற சின்ன பசங்க வாங்கி சாப்பிடறத பாக்கிறதோட சரி.... சின்ன சின்ன பாட்டிலில் காராசேவு, மிச்சர், காரா பூந்தி எல்லாம் இருக்கும், ஒரு ரூபா ரெண்டு ரூபாய்க்கும் பேப்பரில் மடிச்சி கொடுப்பாரு கடைக்காரர்... எல்லாம் பாவம் சில ஏழை பாழைங்க இன்னும் இது மாதிரி கடைங்கள நம்பி இருக்காங்க....

நம்ப கொழந்தைங்கல்லாம்  இப்ப டிவி பாத்துட்டு அதுல வர்ற சாக்லேட், பிஸ்கட் அத தான் கேக்குதுங்க....  நம்ப வீட்டம்மாவும், நாம்ப சாப்டுற ஐட்டமெல்லாம் பாத்து பாத்து தான் வாங்குவாங்க... இப்ப வீட்டுக்கு பக்கத்திலேயே பெரிய பெரிய ஷாப்பிங் கடைஎல்லாம் வந்தாச்சி.... வாரம் ஒருக்கா வீட்டுல கூட்டிட்டு போய் தள்ளு வண்டில ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சாச்சு......

ஆனா ஒன்னு மாசம் எப்படியும் டாக்டருக்குனு நூறு இரநூறு செலவு வந்துகிட்டேதான் இருக்கு.... எங்க தத்தாவுக்கு 89 வயசாகுது, மனுஷன் இன்னும் சைக்கிள் ஒட்டுறார்ணா பாத்துகோங்க... ஒருநாள் தாத்தா என் வீட்டுக்கு வந்தாரு... கேட்டதையே திரும்ப திரும்ப கேட்டுகினு இருந்தாரு... சரி டாப்பிக்க மத்துவோம்ன்னு, தாத்தா பாப்பாவுக்கு என்ன வாங்கியாந்திங்க அப்படின்னு கேட்டுபுட்டேன்.... அவர் நம்ம ஐட்டமெல்லாம் எடுத்து குடுக்கவும் எனக்கு ஒரே சந்தோசம் போங்க..... அவரா, கொழந்த கிட்ட குடுத்து சாப்டு சாப்டுன்னு சொல்ல, கொழந்தைங்க மொத வாங்கிகிச்சுங்க.... அப்புறம் கொஞ்சம் சாப்ட்டுட்டு வேணாம்னு சொல்லிட்டு வெச்சிருசிங்க, தாத்தா குளிச்சிட்டு, சாமி கும்பிட்டு வந்து சோபால ஒக்காந்தாரு, என்னடா கொழந்தைங்க மிட்டாயெல்லாம் சாப்ட்டாங்க்ளான்னு கேட்டுபுட்டாரு...

நானும் சும்மா இருக்காம, எங்க தத்தா இப்ப இருக்கிற கொழந்தைங்கல்லாம் முன்ன மாதிரி கெடயாது , எல்லாம் டிவி பாத்துட்டு கெட்டு போச்சிங்க, என்ன பண்றது தத்தா ன்னு சொல்லவும், தத்தா என்னையே பாத்தாரு, நீ சொல்றது ஒரு விதத்துல சரிதாண்டா, ஆனா ஒரு விஷயத்த எல்லாரும் மறந்துட்டோம், இந்த கடலை மிட்டாய் வெல்ல பாகு, கடலை எல்லாம் போட்டு செஞ்சிருக்கான்... இதுல இரும்பு சத்து, புரத சத்து எல்லாம் இருக்கு, பல்லி மிட்டாய் சீரகம் போட்டு செஞ்சது, ஜீரணத்துக்கு ரொம்ப நல்லது, ஆனா இதையெல்லாம் உட்டுட்டு, நீங்க டாக்டர்கிட்ட போய் இரும்பு டானிக், மாத்திரை எல்லாம்  சாப்பிடரிங்க.  டப்பாவுல அடைச்சு நாட்டு மருந்துன்னு விக்கிற எல்லாமே நம்ம சாப்பாட்டு விஷயத்துல இருக்கு.  நாம்ப பேப்பெர்ல மடிச்சு பலசரக்கு வாங்கினு இருந்தோம், இப்ப பிளாஸ்டிக் கேரி பேக்ல பொருள் வாங்குறோம், இப்ப கவர்மென்ட் என்ன சொல்லுது, பிளாஸ்டிக் கூடாது, பேப்பர், துணி, இல்ல சணல் பை உபயோகிங்கன்னு.... இதாண்டா கால கொடுமைங்கிறது.....

இத கேக்கவும் நான் ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்...... அப்ப நீங்க??